
| கவிதைகள் இன்டெக்ஸ் |
Unicode Page |
|
பிழை பொறுப்பாய் யாஅல்லாஹ்!
காயல்பட்டணம் ஏ.ஆர்.தாஹா
| மண்ணும் விண்ணும் ஆளும் வல்ல இறைவா | ||
| மாந்தரெம்மின் பிழைகள் பொறுத்தருள்வாய் | ||
| இறைவா உன்னருள் வேண்டும் | ||
| இனிதாய் நலம் வேண்டும் | ||
| வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே... | ||
| பாவமென்னும் கடலில் வீழ்ந்து | ||
| பல தீங்குகள் எம்மை சூழ்ந்து | ||
| கலங்கும் நிலை ஆய்ந்து | ||
| கனிவாய் உன்னருள் ஈந்து | ||
| வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே... | ||
| பொருள் தேடிடும் போதையில் திரிந்தேன் | ||
| அருள் தேடிடும் பாதையை மறந்தேன் | ||
| இருளைத் துணைக்கொண்டேன் | ||
| இழிவின் வழி சென்றேன் | ||
| வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே... | ||
| மண்ணும் பொன் பொருள் யாவும் என்னை – உன்னை | ||
| மறந்திடச் செய்தது உண்மை | ||
| உணர்ந்தேன் உள்ளம் தெளிந்தேன் | ||
| உயிராய் உனைத் தொழுதேன் | ||
| வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே... | ||
| அருளாளனே அன்புடையோனே | ||
| அடியார்களின் பிழைப் பொறுப்போனே | ||
| கருணை தயாநிதியே | ||
| காக்கும் அருட்சுடரே | ||
| வல்ல நாயனே தூயனே ஏகனே காப்பாயே... |
நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்