இன்டெக்ஸ்

 கவிதைகள் இன்டெக்ஸ்

Unicode Page

தொழுவோம் வாரீர்

காயல்பட்டணம் ஏ.ஆர்.தாஹா
  தொழுதால் தீரும்  
     
  தொல்லைகள் யாவும்  
     
  தினம் ஐவேளை  
     
  தொழுதிட வேணும்  
     
  மறந்தால் நாசம்  
     
  மறுமையில் மோசம்  
     
  மஹ்ஷர் வெளியில்  
     
  மருகிட நேரும்  
     
     
  படைப்பில் மேலாக நமைநாயன் படைத்தான்  
     
  பகுத்து அறிகின்ற அறிவாற்றல் கொடுத்தான்  
     
  கருவில் உருவாகி நாமிருந்தபோது  
     
  கருணைக் கனிவோடு உணவீத்து காத்தான்  
     
  அருளின் இறையோனை நாம் நினைத்து தொழுதால்  
     
  பெருமைப் பெறுவோமே இருலோகில் நாமே  
     
  மறையாம் குர்ஆனின் நெறிப்பேணி நின்று  
     
  மன்னர் பெருமானார் நபிப்பாதை சென்று  
     
  மண்ணின் மாயைகள் நமைச்சூழுமுன்னே  
     
  மாண்பின் இறையோனை தொழுதாலே மேன்மை  
     
  மரணம் வருமுன்னே தொழுதிடுவோம் இங்கு  
     
  மண்ணறை சென்றபின்னே தொழுதிடுதல் எங்கு  
     
  முஃமீன் அடையாளம் தொழுகை என்றார் நபி  
     
  முனைப்புடன் நாளுமே தொழுதாலே நிம்மதி  
     
  இருளைப் போக்கிடும் இழிநிலை மாற்றிடும்  
     
  இறையருள் சூழ்ந்திடும் இன்னல் பறந்தோடிடும்  
     
  குப்ரின் தீங்கான செயலின்றி வாழ  
     
  கப்ரின் வேதனையில் வீழாது மீள  
     
  சுவனத்தின் திறவுகோல் தொழுகை என்றார் நபி  
     
  கவனத்தில் பேணியே தொழுதாலே மேம்பதி  
     
  மறுமை தீர்ப்பன்று மகிழ்வோடு விண்ணில்  
     
  மாண்புடன் நாம் வாழ தொழவேண்டும் மண்ணில்  
     
  உணர்ந்து தொழுதோர்க்கு உயர்வான சுவணம்  
     
  உதறித் திரிந்தோர்க்கு கேடான நரகம்.  

    நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

முந்தைய பக்கம்

அடுத்த பக்கம்   

இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்