
| கவிதைகள் இன்டெக்ஸ் |
Unicode Page |
|
வாங்காதீர் வரதட்சணை!
புதுமடம் இப்ராஹீம் (ஜித்தா)
| கொடுப்பது குற்றம்-இதைவிட | ||
| வாங்குவது மாபெரும் குற்றம் | ||
| இதுவே இந்தியாவின் சட்டம்-ஆனால் | ||
| கொடுக்காதோர் கொடுமைக்கு ஆளாகிறார்கள் | ||
| கொடுப்போர் விரும்பிக் கொடுப்தில்லை | ||
| மன வேதனையோடுக் கொடுக்கிறார்கள் | ||
| இதையறிந்தும் வாங்கி மகிழ்கிறார்கள் | ||
| ஆண்களில் சில அறிவீனர்கள்! | ||
| ஆத்திரமடையாதீர் தோழர்களே! | ||
| அறிவுப்பூர்வாமாக ஆராய்ந்து பாருங்கள் | ||
| ஆணுக்கு பெருமை சேர்பது பெண்களே! | ||
| பெண்ணைப் பேதையென நினைப்பது மடமையே! | ||
| வாங்கியது போதும் வாலிபர்களே! | ||
| இறைவனுக்குப் பயந்து | ||
| இம்மை மறுமையை நினைத்து | ||
| இன்றே இப்பொழுதே வரதட்சணையை கைவிடுவீர்! | ||
| வெறுக்கக் கூடிய வரதட்சணை | ||
| பெண்களை வருத்தக்கூடியது வரதட்சணை! | ||
| வாழப்போவது மனைவியுடன் தான்! | ||
| வாங்கிய வரதட்சணையுடன் அல்ல!அல்ல! |
நண்பர்களுக்கு அறிமுகம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
|
முந்தைய பக்கம் |
அடுத்த பக்கம் |
இது ஓர் இஸ்லாமிய தமிழ் தஃவா குழுவின் இணையத்தளம்